வெல்லம்பிட்டி-லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் இருந்து நேற்று (11) ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 61 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version