வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8,772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2,858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5,000 தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version