2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (09) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமாக இது இன்று முதல் நடைமுறைக்கு வரும். 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

Share.
Exit mobile version