மக்கள் தமது ஆசனங்களை முன்பதிவு செய்யக்கூடிய நாட்களின் எண்ணிக்கையை நீடிக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, திட்டமிடப்பட்ட பயணத்தின் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக மக்கள் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக, 14 நாட்களாக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.

சிறந்த சேவையை வழங்குமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 13ஆம் திகதி புறப்படவுள்ள அனைத்து ரயில்களுக்கான ஆசன முன்பதிவு செவ்வாய்கிழமை (13) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

Share.
Exit mobile version