பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடகை அடிப்படையில் நடத்தப்படும் சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version