பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பல் கடந்த 23ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் உள்ள டீசலின் அளவு 76 ஆயிரம் மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share.
Exit mobile version