கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version