பெருந்தொகையான பணம் மற்றும் கார் ஆகியவற்றினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி மீரிகம நகரில் நபர் ஒருவரைத் தாக்கி 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் அவரது கார் ஆகியவற்றினை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையிலே, குறித்த நான்கு சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம மற்றும் கலேலியா ஆகிய பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், திருடப்பட்ட காரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version