ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உள்நாட்டு யுத்தம் காரணமாக அண்டை நாடான இந்தியாவிற்கு அகதிகளாக தப்பிச் சென்ற இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, ஏறத்தாழ 58,000 இலங்கையர்கள் தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியுள்ளனர், அவர்களில் 3,800 பேர் மட்டுமே இலங்கைக்குத் திரும்பத் தயாராக உள்ளனர்.

செப்டெம்பர் 5 திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான முயற்சிகளை சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஒருங்கிணைத்து வருகின்றது.

Share.
Exit mobile version