மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட 3.1 தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விமானம் ஒன்று நேற்று இலங்கையை வந்தடைந்தது.

1.6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருந்துகளையும் உபகரணங்களையும் இந்தோனேசியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மனிதாபிமான உதவிகள் இரண்டு தவணை களாக இலங்கைக்கு வழங்கப்பட வுள்ளதுடன், முதல் தவணையாக ஜகார்த்தாவிலிருந்து நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Share.
Exit mobile version