நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை (06) பிற்பகல் 4 மணிவரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version