ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 9,000 போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்களை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை ஹிரணவில் பகுதியில் வைத்து வேன் மற்றும் காருடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மானமுல்ல மற்றும் ஹிரன பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

10 மாத்திரைகள் 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share.
Exit mobile version