வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

12 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Exit mobile version