தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்றிரவு (04) கணவனால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தனது தாயின் வீட்டில் வசித்து வந்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வெளிநாட்டில் இருந்ததாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கை திரும்பியதாகவும், தனது தாயுடன் வசித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கொட்டவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version