3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

தற்போது முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகிக்கப்படுகின்ற போதிலும் பல பிரதேசங்களில் மக்கள் எரிவாயு இன்றி தவிக்கின்றனர்.

சில இடங்களில் எரிவாயு விநியோகத்தின் போது அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version