ஐ.சி.சி இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.

இன்று ( ஞாயிற்க்கிழமை) அவர் இட்ட ட்விட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணிக்காக 102 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார், இதேவேளை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் முஷ்பிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பங்ளாதேஷ் அணி வெளியேறியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Share.
Exit mobile version