இன்று (04) அதிகாலை 5.30 மணியளவில் மிரிஹானவில் இருந்து பிடகோட்டே நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் ஒன்று கோட்டே ஸ்ரீ நாகவிஹாரைக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ரீ நாகவிஹார சுவர் உட்பட பல இடங்களில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் கோட்டே நாகவிகாரையின் மதில் சுவர் மற்றும் ஏனைய கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அருகில் பொருத்தப்பட்டிருந்த பல பாதுகாப்பு கமராக்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சொகுசு ஜீப் வண்டியின் சாரதி மிரிஹான பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version