இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் குறித்து இன்று காலை கலந்துரையாடியதாக அமைச்சர் இன்று தெரிவித்தார்.

இந்தக் குழு, அபிவிருத்தி முகவர், துறை நிபுணர்கள், பங்குதாரர்களை சந்தித்து அடுத்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை (PUCSL) சந்திக்கும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

Share.
Exit mobile version