மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு 13 பேர் இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிலுள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ்ப்பிரிவில் கொழுந்து பறித்த மக்களே இவ்வாறு இன்று நண்பகல் வேளையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

குளவி கொட்டுக்கு உள்ளானவர்களில் 10 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்கவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய ஒன்பது பேர் வெளி நோயாளர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது,

அத்துடன் குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் உடன் தோட்ட அம்பூலன்ஸ ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடதக்கது.

Share.
Exit mobile version