எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.

இதன்படி, காலியின் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகங்களுக்கும், களுத்துறையின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகங்களுக்கும், இரத்தினபுரி, எலபாத்த மற்றும் குருவிட்ட பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல அமுக்கத்தை மேற்கோள்காட்டி, கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கையையும் திணைக்களம் விடுத்துள்ளது.

Share.
Exit mobile version