அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 60 சதவீதம் அமெரிக்காவிலும், 38 சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகி உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version