மாகாண சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் இணையவழி முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் இன்று (29) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version