முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாட்டுக்கு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த சாகர காரியவசம் எம்.பி,

சமீபத்தில் அவர் நாட்டுக்கு வருகைத் தருவார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு வருவது போலவே, அவர் இலங்கையை விட்டு வெளியேறிய நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். அவர் இலங்கையை அழகான சூழலில் விட்டுச் செல்லவில்லை. மீண்டும் வந்தால் அவர் இங்கு இருக்க வேண்டும். ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு பொருத்தமான அதே பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் மிக விரைவில் நாடு திரும்புவார் எனவும் சாகர காரியவசம் எம்.பி. நம்பிக்கை வெளியிட்டார்.

Share.
Exit mobile version