எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்றை நியமித்து அதன் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சியிடம் கோருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சம்பிக்க ரணவக்க மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என கூறியுள்ளனர்.அவ்வாறான குழுவொன்றை உருவாக்கி எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைத்தால் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தான் மகிழ்ச்சியடைவேன் என அமைச்சர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version