நாடு முழுவதும் 60 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (29) எரிபொருள் வரிசைகள் குறைவடைந்துள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்னும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version