யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டொன்று செல்ல முற்றபட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த அனைவரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share.
Exit mobile version