சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கையளித்த உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் யோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பிலும் இன்று ஆராயப்படவுள்ளது.

Share.
Exit mobile version