மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த சந்தேகநபர்கள் 3 பேர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்.பிக்களான விமல் வீரவன்ச, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹோகந்தர, கிரிந்திவெல மற்றும் தங்கொடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 37, 43 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, மாலம்பே மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version