தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கோட்டாபய ராஜபக்ச கைவிட்ட நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகள் கிடைக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம் என்றும்  உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானில் உள்ள பிரத்தியேக வீட்டை உரிய முறையில் திருத்திக்கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version