சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது தலைமன்னார் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட போது கடற்படையினர் இழுவை படகு மற்றும் கடல் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Share.
Exit mobile version