சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது மேலும் தாமதமானால் உடனடியாக இராஜாங்க அமைச்சரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளும் தரப்பு நாடாளுமன்றக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை (29) மாலை 5 மணிக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பிற்காக கூடவுள்ளது.

Share.
Exit mobile version