நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 பேர் தங்களது நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையானது சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

இதனால் தற்போது ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபா பணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்ததை தொடர்ந்து குறித்த அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version