இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் – நோர்வே – சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து, நிறுவனங்கள் மற்றும் அவசர சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நாளாந்த மின்வெட்டு, பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு அல்லது அவசரகால நிலை பிரகடனம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் குறித்த நாடுகள் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.

Share.
Exit mobile version