தென் மாகாணப் பாடசாலைகளில் பட்டதாரிகள் 19 பேர் துப்பரவுத் தொழிலாளர்களாக கடமைபுரிவதாக தென் மாகாணப் கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அடங்கலாக 68 பட்டதாரிகள் பாடசாலைகளில் வாசிகசாலை உதவியாளர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவை தரம் 8 சித்தி பெற்றவர்களுக்கான பதவிகள் என்றும் அவற்றில் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பரவுத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களை வாசிக சாலை மற்றும் ஆய்வுகூட உதவியாளர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version