ஹட்டன் சிங்கமலை சுரங்கத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சட்டை பையில் பணம் மத்திரமே இருந்துள்ளதாகவும் சடலம் தற்போது ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Exit mobile version