ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Share.
Exit mobile version