அக்கரைப்பற்று உப தபால் நிலைய வீதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இராசிய தகவலின்படி உப பொலிஸ் பரிசோதகர் நூர்தீன் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான அனஸ், தாஹீர் ஆகியோர் நேற்று (25) குறித்த பிரதேசத்திற்கு சென்று நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 45 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version