திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இம்மாதம் 25,26 மற்றும் 27ஆம் திகதிகளில் பகல் வேளையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கந்தளாய் குளத்தின் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, திருகோணமலை-கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டான்குளம், நிலாவெளி, பட்டினபுரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version