அநுராதபுரம், தலாவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் 2.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அண்மையில் நகைக் கடையின் பின்பக்க கதவுக்குள் புகுந்த திருடன் தங்கம், வெள்ளி மற்றும் இரத்தினக் கற்களை திருடிச் சென்றிருந்தான்.

எவ்வாறாயினும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில், இரகசிய முகவர் ஒருவரைப் பயன்படுத்தி பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இருவரை தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் இன்று (26) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Exit mobile version