இந்தியக் கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 21,000 மெட்ரிக் டொன் யூரியா உரம், தேயிலை மற்றும் சோளப் பயிர்ச்செய்கைகளுக்காக உள்ளூர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மகா அறுவடைக் காலத்திற்காக 8 மாவட்டங்களில் 21,200 ஏக்கர் தரிசு நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 100,000 ஏக்கர் பயிர் செய்யப்படாத தரிசு வயல் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் அமைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version