மாவனல்லை உத்துவான்கந்த மலையில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேர் கொண்ட குழுவுடன் ஆய்வுக்காக உடுவான்கந்தவிற்கு விஜயம் செய்திருந்த அவர், பிற்பகல் வேளையில் தவறி கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version