இன்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது வவுனியா ஏ9 வீதி தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த லொறியானது சட்டவிரோதமாக கால்நடைகளை கொழும்பிற்கு ஏற்றிச்சென்ற வேளையே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

d

Share.
Exit mobile version