வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

டெங்கு,கொரோனா மற்றும் இன்புளுவென்சா போன்ற நோய்கள் தற்போது பரவி வருவதால் அறிகுறிகளைக் கவனித்து மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு திரு.சுதத் சமரவீர மக்களுக்குத் தெரிவிக்கிறார்.

Share.
Exit mobile version