வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறிய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் மீளாய்வுக் கூட்டத்தில் QR குறியீட்டு முறையின் அமுலாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் பொது மக்கள் அனுப்பும் முறைப்பாடுகளை காவல்துறை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version