இரண்டு இளம் சிறுத்தைகள் ஹார்டன் சமவெளியில் சுற்றித் திரிவதை புகைப்படம் எடுத்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த சிறுத்தைகளின் நடத்தை ஹார்டன் சமவெளிக்கு வருபவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், மக்கள் கால் நடையாக பயணிக்க தடைசெய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காரணமாக சிறுத்தைகளால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலத்தில் இதுபோன்ற நடத்தை சாதாரணமானது என்றும், பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Share.
Exit mobile version