ஏர்போர்ட் அண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தனது புதிதாக நிறுவப்பட்ட சேவைத் தயாரிப்பான ‘கோல்ட் ரூட்’ இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அறிமுகப்படுத்தியது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் அதன் பெறுமதிமிக்க பயணிகளுக்கு ‘பிரீமியம் விமான நிலைய அனுபவத்தை’ வழங்கும் நோக்கில் புதிய சேவை தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, விமான நிலையம் வணிக ரீதியில் முக்கியமான பயணிகளுக்கு பட்டு வழி சேவை வசதியை மட்டுமே கட்டண அடிப்படையில் வழங்கியது.

எனவே, விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நாட்டிற்கு கூடுதல் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் பங்களிக்கும் நோக்கத்துடன் ‘GOLD ROUTE’ தொடங்கப்பட்டது.

இந்தச் சேவையின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், உயர்நிலைப் பயணிகள் பிரீமியம் சேவை அனுபவத்துடன் வருகை மற்றும் புறப்பாடு செயல்முறைகளை விரைவுபடுத்த பிரத்யேக வழியைப் பயன்படுத்த முடியும் என்பதாகும்.

கோல்ட் ரூட்டில் விருந்தினர்கள் அனைவரும் சுங்கம், குடிவரவு மற்றும் குடியேற்றப் பிரிவு மற்றும் பிற அனைத்து சம்பிரதாயங்கள் உட்பட விரைவான செக்-இன் செயல்முறையை பெற முடியும்.

BIA இல் உள்ள GOLD ROUTE சேவை வசதியானது , பயணிகளுக்கு USD 200க்கு வழங்கப்படுவதோடு ,  www.airport.lk என்ற இணையத்தளம் மூலம் முன்பதிவும் செய்யலாம்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி. ஏ. சந்திரசிறி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஜெனரல் பி. ஏ. ஜெயகாந்த மற்றும் ஏனைய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் புதிய சேவை வசதி BIA இல் திறந்து வைக்கப்பட்டது.

Share.
Exit mobile version