முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜபக்ச வருகையை தொடர்ந்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தேவையான வசதிகளை செய்து தருமாறும் SLPP கேட்டுக்கொள்கிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version