பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் நான்கு மாணவ செயற்பாட்டாளர்கள் கொழும்பு யூனியன் பிளேஸில் வைத்து வியாழக்கிழமை (18) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு 02 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட முதலிகேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வசந்த முதலிகே கொழும்பு எரிவாயு தொழிற்சாலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரது மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version