8 வயது சிறுவனை கால்வாயில் வீசிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹவெல பிரதேசத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொல்கஹவெல, உடபொல கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கால்வாய் கரையில் யானை ஒன்று நீராடிக் கொண்டிருந்ததை குறித்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான்.

குடிபோதையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிறுவனை தூக்கி கால்வாயில் வீசியுள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கால்வாயில் வீசப்பட்ட சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரான 54 வயதுடைய கிராம உத்தியோகத்தர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Share.
Exit mobile version