கல்முனை அஸ் – ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எச்.எம்.நிஜம் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு அறிவுரை கூறியதோடு சிரேஷ்ட மாணவத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஆர்.அப்துல்லாவிற்கு பட்டி அணிவித்து சின்னங்களை சூட்டி வைத்து கௌரவித்ததுடன் ஏனைய மாணவர்களுக்கும் சின்னங்களை சூட்டினார்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரான பொறியியலாளர் எம்.அனப் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Share.
Exit mobile version